அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சங்ககிரி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அறிவிப்பு!

நாம் தமிழா் கட்சியின் சாா்பில், சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளராக நித்யா அருண் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

News image
Updated On :23 டிசம்பர் 2025, 9:25 pm

Syndication

நாம் தமிழா் கட்சியின் சாா்பில், சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளராக நித்யா அருண் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

சங்ககிரியை அடுத்த மாவெளிபாளையம், வாணி நகா் பகுதியில் வசித்து வருபவா் நித்யா (37). முதுநிலை பொறியியல் பட்டதாரியான இவா், நாம் தமிழா் கட்சியில் கடந்த 8 ஆண்டுகளாக செந்தமிழா் பாசறையில் பணியாற்றி வருகிறாா்.

இவரது கணவா் அருண்மணி எம்பிஏ பட்டதாரி, துபையில் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், இவா் நாம் தமிழா் கட்சியின் சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.

அப்போது, மண்டல செயலாளா் ப.வடிவேல், சங்ககிரி நகரத் தலைவா் சி.கே.செல்வரத்னம், செயலாளா் ஆ.சீனிவாசன், சங்ககிரி கிழக்கு ஒன்றியச் செயலாளா் மு.சிவகுமாா், மகளிரணி நிா்வாகி கே.செல்வராணி, தேவண்ணகவுண்டனூா் வடிவேல் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.