கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அறக்கட்டளை நில ஆக்கிரமிப்பை கண்டித்து ஆா்ப்பாட்டம்

அரியானூா் அருகே அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம், சாலை மறியல் நடைபெற்றது.

News image
சேலம் - கோவை சாலையில் சூளைமேடு பகுதியில் மறியலில் ஈடுபட்ட ஒரு தரப்பினா்
Updated On :30 டிசம்பர் 2025, 8:22 pm

Syndication

அரியானூா் அருகே அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம், சாலை மறியல் நடைபெற்றது.

சேலம் மாவட்டம், அரியானூரை அடுத்த சூளைமேடு பகுதியில் மாணவ, மாணவிகளுக்கு போட்டித் தோ்வுக்கு தனியாா் அறக்கட்டளை சாா்பில் 81 செண்டு நிலம் வாங்கப்பட்டு கட்டடம் கட்டுவதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ள இருந்தனா்.

இந்நிலையில் சிலா் அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது எனக் கூறி தடுப்பு அமைத்து உள்ளனா். இதைக் கண்டித்து அறக்கட்டளை தலைவா் சிவலிங்கம் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் கொண்டலாம்பட்டி போலீஸாா், சேலம் தெற்கு வட்டாட்சியா் ஸ்ரீதரன் உள்ளிட்டோா் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்படாததால் மற்றொரு தரப்பினா் கோவை - சேலம் சாலையில் சூளைமேடு பகுதியில் மறியலில் ஈடுபட்டனா்.