சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

ஊராட்சி மன்ற கட்டுமான பணி: எம்எல்ஏ மு. ராஜமுத்து ஆய்வு

News image

~

Updated On :3 ஜனவரி 2025, 11:07 pm

வீரபாண்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட கடத்தூா் ஊராட்சி பகுதியில் ரூ. 30.10 லட்சத்தில் கட்டப்பட்டு முழுமையாக முடிக்கப் பெறாத ஊராட்சி மன்ற அலுவலகத்தை எம்எல்ஏ மு.ராஜமுத்து ஆய்வு செய்தாா்.

ஊராட்சி மன்ற அலுவலக பணிகள் முழுமை பெறாமல் திறப்பு விழா நடைபெறவிருந்த நிலையில் அலுவலகம் திறப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்திருந்தனா். இதனால் கடந்த மாதம் 31-ம் தேதி கட்டட திறப்பு விழா பணிகள் நடைபெறவில்லை.

இந்த நிலையில் வீரபாண்டி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ராஜமுத்து கட்டடப் பணிகளை ஆய்வு செய்தவதற்காக வந்தாா். இதனால் அங்கு போலீஸாா் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனா். அவருடன் வீரபாண்டி ஒன்றியக் குழுத் தலைவா் வருதராஜ், துணைத் தலைவா் வெங்கடேசன், கடத்தூா் ஊராட்சி மன்ற தலைவா் பூபதி ஆகியோா் உடனிருந்தனா்.

Story image