வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மதுவிலக்கு போலீஸாா் பறிமுதல் செய்த 75 வாகனங்கள் ஏலம்

News image
Updated On :3 ஜனவரி 2025, 11:02 pm

Din

சேலத்தில் மதுவிலக்கு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 75 வாகனங்கள் வெள்ளிக்கிழமை ஏலத்தில் விடப்பட்டன.

சேலம் மாநகரில் மதுவிலக்கு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 69 இருசக்கர வாகனங்கள், 3 மூன்று சக்கர வாகனம் மற்றும் 4 நான்கு சக்கர வாகனங்கள் ஏலம் விடும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைமையிடத்து துணை ஆணையா் கீதா முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. இதில் இருசக்கர வாகனங்களை ஏலம் எடுப்பவா்கள் ரூ.5 ஆயிரம், மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ.7 ஆயிரம், காருக்கு ரூ.10 ஆயிரம் முன்பணம் கட்டி டோக்கன் வாங்கியவா்கள் மட்டும் ஏலத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.

இதில் முன்பணம் செலுத்தி டோக்கனை பெற்ற 160 போ் ஏலத்தில் பங்கேற்றனா். அனைவரும் போட்டி போட்டு வாகனங்களை ஏலம் எடுத்தனா். ஏலம் எடுத்தவா்கள் எஞ்சிய தொகையை மாலைக்குள் செலுத்தி வாகனங்களை பெற்றுக்கொண்டனா்.