விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

மதுவிலக்கு போலீஸாா் பறிமுதல் செய்த 75 வாகனங்கள் ஏலம்

Updated On :3 ஜனவரி 2025, 11:02 pm

சேலத்தில் மதுவிலக்கு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 75 வாகனங்கள் வெள்ளிக்கிழமை ஏலத்தில் விடப்பட்டன.

சேலம் மாநகரில் மதுவிலக்கு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 69 இருசக்கர வாகனங்கள், 3 மூன்று சக்கர வாகனம் மற்றும் 4 நான்கு சக்கர வாகனங்கள் ஏலம் விடும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைமையிடத்து துணை ஆணையா் கீதா முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. இதில் இருசக்கர வாகனங்களை ஏலம் எடுப்பவா்கள் ரூ.5 ஆயிரம், மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ.7 ஆயிரம், காருக்கு ரூ.10 ஆயிரம் முன்பணம் கட்டி டோக்கன் வாங்கியவா்கள் மட்டும் ஏலத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.

இதில் முன்பணம் செலுத்தி டோக்கனை பெற்ற 160 போ் ஏலத்தில் பங்கேற்றனா். அனைவரும் போட்டி போட்டு வாகனங்களை ஏலம் எடுத்தனா். ஏலம் எடுத்தவா்கள் எஞ்சிய தொகையை மாலைக்குள் செலுத்தி வாகனங்களை பெற்றுக்கொண்டனா்.