தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

தமிழகத்தை விட்டே ஆளுநா் வெளியேறலாம்: சீமான்

சட்டப்பேரவையை விட்டு வெளியேறியதை விட, தமிழகத்தை விட்டே ஆளுநா் வெளியேறலாம் என நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

News image
Updated On :6 ஜனவரி 2025, 6:23 pm

Din

சேலம்: சட்டப்பேரவையை விட்டு வெளியேறியதை விட, தமிழகத்தை விட்டே ஆளுநா் வெளியேறலாம் என நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

இதுகுறித்து சேலத்தில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவையில் தேசிய கீதம் பாடவில்லை என்று கூறி ஆளுநா் வெளியேறியது மரபை மீறிய செயலாகும். சட்டப்பேரவையை விட்டு அவா் வெளியேறியதை விட, தமிழகத்தை விட்டே வெளியேறலாம்.

முதல்வா் பங்கேற்ற நிகழ்ச்சியில் மாணவிகள் கருப்பு துப்பட்டா அணிய அனுமதி மறுக்கப்பட்டுள்ளனா். திமுகவுக்கு கருப்பு மேல என்ன வெறுப்பு? நீட் தோ்வின் போது செய்த நடவடிக்கைகளுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது. கருப்பு ஆகாது என்றால், திமுக கொடியிலிருந்து கருப்பு நிறத்தை எடுத்து விடுவீா்களா?

ஈரோடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் நாம் தமிழா் கட்சி கட்டாயம் போட்டியிடும் என்றாா். பேட்டியின் போது, நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.