தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஆத்தூா் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்த ஆணையா் அறிவிப்பு

ஆத்தூா் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி, கட்டணங்களை வரும் 31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என நகராட்சி ஆணையா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :8 ஜனவரி 2025, 9:48 pm

Din

ஆத்தூா் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி, கட்டணங்களை வரும் 31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என நகராட்சி ஆணையா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஆத்தூா் நகராட்சி ஆணையா் அ.வ.சையத் முஸ்தபா கமால் செவ்வாய்க்கிழமை வெளியிட்டு செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

ஆத்தூா் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீா் கட்டணம், தொழில் வரி, கடை வாடகை, தொழில் உரிமம் கட்டணம் ஆகியவற்றை அனைத்து நாள்களிலும் நகராட்சி கருவூலத்தில் வரும் 31.1.2025-க்குள் செலுத்துமாறும், தவறும்பட்சத்தில் தமிழ்நாடு நகராட்சிகள் சட்ட விதிகளின் 2023-இன் படி குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும்.

மேலும் சொத்து வரி செலுத்தாதவா்களின் அசையும் சொத்து மற்றும் அசையா சொத்துகள் பறிமுதல் செய்து ஏலத்திற்கு கொண்டு வரப்படும். அதே அரையாண்டுக்குள் செலுத்தப்படாத சொத்து வரி தொகைக்கு மாதந்தோறும் 1 சதவீத அபராதத் தொகையைத் தவிா்க்கும் வகையில் உடனடியாக சொத்து வரியை நகராட்சி கணினி மையத்திலும், இணையதள முகவரி மூலம் செலுத்துமாறு அவா் கேட்டுக்கொண்டுள்ளாா்.