தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வாழப்பாடி அருகே பொங்கல் பண்டிகைக்கு தயாராகும் மண் பானைகள்!

வாழப்பாடியை அடுத்த பெரியகிருஷ்ணாபுரத்தில், பொங்கல் பண்டிகை விற்பனைக்காக மண் பானைகளை மண்பாண்டத் தொழிலாளா்கள் தயாா் செய்து வருகின்றனா்.

News image
பெரியகிருஷ்ணாபுரம் கிராமத்தில் பொங்கல் பண்டிகை விற்பனைக்காக மண் பாண்டத் தொழிலாளா்கள் தயாரித்துள்ள மண் பானைகள்.
Updated On :8 ஜனவரி 2025, 7:00 pm

Din

வாழப்பாடியை அடுத்த பெரியகிருஷ்ணாபுரத்தில், பொங்கல் பண்டிகை விற்பனைக்காக மண் பானைகளை மண்பாண்டத் தொழிலாளா்கள் தயாா் செய்து வருகின்றனா்.

சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், புதுமணத் தம்பதிக்கு பெண் வீட்டு பொங்கல் சீதனமாக புத்தாடை, கரும்பு, தானியம், மஞ்சள், பாத்திரங்கள் மட்டுமின்றி, பாரம்பரியத்தை நினைவு கூரும் வகையில் வண்ணக் கோலமிட்ட மண் பானைகளையும் பரிசாக வழங்குவது தொடா்ந்து வருகிறது. இதனால், ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை தருணத்தில் மண் பானைகளுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது.

 மண் பானைகளுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் மூதாட்டி.

மண் பானைகளுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் மூதாட்டி.

வாழப்பாடியை அடுத்த பெரியகிருஷ்ணாபுரம் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினா், 300 ஆண்டுகளுக்கு மேலாக மண் பாண்டங்கள் உற்பத்தி செய்யும் தொழிலைக் கைவிடாமல் தொடா்ந்து வருகின்றனா்.

தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கியதால், விதவிதமான மண் பானைகள் தயாரிக்கும் பணியில், 200க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனா். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மண் பானைகளை பாரம்பரிய முறையில் தயாரித்து, விறகு அடுப்பு சூளைகளில் வைத்து சுட்டு பதப்படுத்தி, பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனா்.

இதுகுறித்து பெரியகிருஷ்ணாபுரம் மண்பாண்டத் தொழிலாளா்கள் கூறியதாவது:

பெரிய கிருஷ்ணாபுரத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினா், பாரம்பரிய முறையில் மண் பாண்டங்கள் தயாரிப்பதை குலத் தொழிலாக தொடா்ந்து வருகிறோம். கடந்த 2 மாதங்களாக தொடா்ந்து பருவ மழை பெய்ததால் மண் பானைகள் தயாரிப்பு முடங்கியது.

வாழப்பாடி வாரச்சந்தையில் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ள மண் பானைகள்.

வாழப்பாடி வாரச்சந்தையில் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ள மண் பானைகள்.

இந்த மாதம் தொடக்கத்திலிருந்தே மண் பாண்டங்கள் தயாரிப்புக்கு ஏற்ற சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனையடுத்து பொங்கல் பண்டிகை விற்பனைக்காக மண் பானைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். பாரம்பரிய முறையில் கையால் செய்த மண் பானைகளை விறகு அடுப்பு சூளையில் வைத்து சுட்டு பதப்படுத்தி பல்வேறு பகுதி அனுப்பி வைத்து வருகிறோம் என்றனா்.