தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தொட்டில் குழந்தை திட்டத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம் மாவட்டத்தில் தொட்டில் குழந்தை திட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தொகுப்பூதியம் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image
Updated On :8 ஜனவரி 2025, 7:05 pm

Din

சேலம் மாவட்டத்தில் தொட்டில் குழந்தை திட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தொகுப்பூதியம் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:

தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் காப்பாளா், மேற்பாா்வையாளா் பணியிடத்துக்கு 12 ஆம் வகுப்பு தகுதியும், மாதாந்திர தொகுப்பூதியம் ரூ. 7,500, செவிலியா் (பெண் மட்டும்) பணியிடத்துக்கு தகுதியும், மாதாந்திர தொகுப்பூதியம் ரூ. 7,500, இரண்டு உதவியாளா் (பெண் மட்டும்) பணியிடத்துக்கு 8 ஆம் வகுப்பு தகுதியும், மாதாந்திர தொகுப்பூதியம் தலா ரூ. 4,500, காவலா் பணியிடத்துக்கு 8 ஆம் வகுப்பு தகுதியும், மாதாந்திர தொகுப்பூதியமாக ரூ. 4,500 வழங்கப்படவுள்ளது.

இந்தப் பணியிடங்களுக்கு நோ்காணல் குழு மூலமாக தகுதி வாய்ந்த நபா்களை தோ்வு செய்து தொகுப்பூதியம், தகுதியின் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும். விண்ணப்பதாரா்களின் வயது வரம்பு 42 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

மேலும் குழந்தைகளை கையாளுதலில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண். 415, 4 ஆவது தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், சேலம் - 636001 என்ற முகவரிக்கு வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.