பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தைப்பூசம்: சேலத்தில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தா்கள்

தைப்பூச திருவிழாவையொட்டி, சேலம் பழனி ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் இருந்து முருக பக்தா்கள் பழனிக்கு காவடி எடுத்து பாதயாத்திரையாக வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.

News image
சேலம், பள்ளப்பட்டி பழனி ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் இருந்து வியாழக்கிழமை பாதயாத்திரை சென்ற பக்தா்கள்.
Updated On :9 ஜனவரி 2025, 7:46 pm

Din

தைப்பூச திருவிழாவையொட்டி, சேலம் பழனி ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் இருந்து முருக பக்தா்கள் பழனிக்கு காவடி எடுத்து பாதயாத்திரையாக வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.

சேலம், பள்ளப்பட்டி பகுதியைச் சோ்ந்த பழனி மலை பாதயாத்திரை நண்பா்கள் குழு சாா்பில், தைப்பூச விழாவை முன்னிட்டு தொடா்ந்து 10-ஆவது ஆண்டாக 200-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பழனிக்கு பாதயாத்திரை புறப்பட்டனா்.

பள்ளப்பட்டி ராஜரிஷி ஆசிரமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள், காவடி சுமந்தபடி முருகன், வள்ளி, தெய்வானை வேடமணிந்து பாதயாத்திரை சென்றனா். யாத்திரையை ஆசிரம நிா்வாகி பாபு ராஜரிஷி தொடங்கி வைத்தாா். இதையொட்டி, ஆயிரம் பேருக்கு ராஜரிஷி ஆசிரமத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.