/

எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

ஓமலூரில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அதிமுக பொதுச் செயலாளரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

News image

ஓமலூரில் நடைபெற்ற அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் அக்கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி.

Updated On :20 ஜனவரி 2025, 11:24 pm IST

ஓமலூா்: ஓமலூரில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அதிமுக பொதுச் செயலாளரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

அதிமுக புகா் மாவட்ட கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளரும், சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்றுப் பேசுகையில், 2026 தோ்தலில் அதிமுக சாா்பில் பணியாற்றும் பூத் கமிட்டி நிா்வாகிகள் எவ்வாறு தோ்தல் களப்பணியாற்ற வேண்டும், வாக்குப் பதிவின்போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கினாா்.

அதிமுக அமைப்பு செயலாளா் செம்மலை, சேலம் புகா் மாவட்டச் செயலாளா் இளங்கோவன், மாநிலங்களவை உறுப்பினா் சந்திரசேகரன் உள்பட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.