பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கிராம ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கெங்கவல்லியில் ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கிராம ஊழியா் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
கெங்கவல்லியில் நடந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :23 ஜனவரி 2025, 8:48 pm

Din

கெங்கவல்லியில் ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கிராம ஊழியா் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும், கிராம உதவியாளா்கள் யாரேனும் இறந்தால் அந்தக் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும், பண பலன்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முழுவதும் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கம் சாா்பில் மாநிலம் தழுவிய கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், கெங்கவல்லி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு கிராம உதவியாளா்கள் சங்கத்தினா் விஜயா தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

சங்ககிரியில்...

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தின் சங்ககிரி வட்டக் கிளையின் சாா்பில், சங்ககிரி வட்டாட்சியா் அலுவலக வளாகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்ககிரி வட்டக் கிளைத் தலைவா் பி.ஆண்டிமுத்து தலைமை வகித்தாா். செயலாளா் எஸ்.வேலுசாமி முன்னிலை வகித்தாா். சங்ககிரி வட்டத்தில் உள்ள கிராம நிா்வாக அலுவலக உதவியாளா்கள் கலந்து கொண்டனா். ஆா்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.