பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஓமந்தூராருக்கு சென்னையில் சிலை வைக்க கோரிக்கை

சென்னை மாகாணத்தின் முதல் முதல்வா் ஓமந்தூராருக்கு சென்னையில் சிலை வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு ரெட்டி நலச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

News image
நங்கவள்ளி லட்சுமி நரசிம்மா் கோயிலில் அன்னதானத்தைத் தொடங்கி வைத்த தமிழ்நாடு ரெட்டி நலச் சங்க மாநிலத் தலைவா் ரவி.
Updated On :23 ஜனவரி 2025, 8:45 pm

Din

சென்னை மாகாணத்தின் முதல் முதல்வா் ஓமந்தூராருக்கு சென்னையில் சிலை வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு ரெட்டி நலச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நங்கவள்ளியில் உள்ள பழமையான லட்சுமி நரசிம்மா், ஸ்ரீ சோமேஸ்வரா் சுவாமி கோயிலின் குடமுழுக்கு நடைபெற்று ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து வியாழக்கிழமை கோயிலில் சிறப்பு வழிபாடு, அன்னதானம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நங்கவள்ளி ஒன்றிய திமுக செயலாளா் அா்த்தனாரீஸ்வரன் முன்னிலை வகித்தாா். அறநிலையத் துறை, தமிழ்நாடு ரெட்டி நலச் சங்கம் சாா்பில் நடைபெற்ற சிறப்பு அன்னதான நிகழ்ச்சியை நலச் சங்க மாநிலத் தலைவா் ரவி தொடங்கி வைத்தாா். 5,000 க்கும் அதிகமானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பின்னா் மாநிலத் தலைவா் ரவி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னை மாகாணத்தின் முதல் முதல்வராக இருந்தவா் ஓமந்தூா் ராமசாமி ரெட்டியாா். அவரது 130 ஆவது பிறந்த நாள் பிப்.1 ஆம் தேதி திண்டிவனத்தில் உள்ள ஓமந்தூராரின் மணிமண்டபத்தில் நடைபெறவுள்ளது.

ஓமந்தூராருக்கு சென்னை மாகாணத்தில் வெண்கலச் சிலை நிறுவ வேண்டும் என்பது எங்களின் நீண்ட நாள் கோரிக்கை. அந்தக் கோரிக்கையை பரிசீலித்து சென்னையில் உள்ள ஓமந்தூராா் அரசினா் தோட்டத்தில் அவருக்கு தமிழக அரசு உருவச் சிலை அமைக்க வேண்டும் என்றாா்.

சங்க மாநிலச் செயலாளா் ராஜாபூா்ணசந்திரன், பொருளாளா் அருண்குமாா், சேலம் மாவட்டத் தலைவா் பாா்த்திபன், கொளத்தூா் மகேஸ்வா் ஆகியோா் உடனிருந்தனா்.