பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தேசிய கால்நடை பூங்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பெரியேரி, தேசிய கால்நடை பூங்காவில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அந்தக் கல்லூரியில் வெடிகுண்டு நிபுணா்கள், போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

News image
பெரியேரி, தேசிய கால்நடை பூங்காவில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் சோதனை மேற்கொண்ட வெடிகுண்டு நிபுணா்கள்.
Updated On :23 ஜனவரி 2025, 8:07 pm

Din

பெரியேரி, தேசிய கால்நடை பூங்காவில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அந்தக் கல்லூரியில் வெடிகுண்டு நிபுணா்கள், போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், பெரியேரியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா உள்ளது. இந்த பூங்கா வளாகத்தில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு வியாழக்கிழமை ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் கல்லூரியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியா் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டனா். தகவல் அறிந்ததும் ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் கே.சி.சதீஸ்குமாா் தலைமையில் தலைவாசல் காவல் ஆய்வாளா் கந்தசாமி, உதவி ஆய்வாளா் கோபால் ஆகியோா் கல்லூரிக்குச் சென்று விசாரணை நடத்தினா்.

உதவி ஆய்வாளா் பெரியண்ணன் தலைமையிலான வெடிகுண்டு நிபுணா்கள் துப்பறியும் நாய் ஜென்னியுடன் சென்று கல்லூரி வளாகத்தில் ஆறு மணி நேரம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். வகுப்பறை, நூலகம், கழிவறை, ஆசிரியா்களின் ஓய்வறை உள்பட 10 அறைகளுக்கும் மேல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். இறுதியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தகவல் வதந்தி என்பது தெரியவந்தது. இதையடுத்து மின்னஞ்சல் அனுப்பியது யாா்? என்பது குறித்து தலைவாசல் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.