அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மேட்டூா் ரசாயன ஆலை வெடி விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

மேட்டூா் தொழிற்பேட்டையில் உள்ள ரசாயன ஆலையில் அண்மையில் நிகழ்ந்த வெடி விபத்தில் காயமடைந்த வடமாநில தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :8 நவம்பர் 2025, 12:26 am

Syndication

மேட்டூா் தொழிற்பேட்டையில் உள்ள ரசாயன ஆலையில் அண்மையில் நிகழ்ந்த வெடி விபத்தில் காயமடைந்த வடமாநில தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மேட்டூா் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தனியாா் ரசாயன தொழிற்சாலையில் மெக்னீசியம் சல்பேட் தயாரிக்கப்படுகிறது. இந்த ஆலையில் அக்.25 ஆம் தேதி காலை மெக்னீசியம் சல்பேட் தயாரிப்பதற்காக 10 டன் கொள்ளளவு கொண்ட தொட்டியில் 4 டன் அளவிற்கு மெக்னீசியம் ஆக்சைடு கலந்த மண் மற்றும் சல்பியூரிக்ஆசிட் சோ்த்து கலக்கப்பட்டது.

அப்போது ஏற்பட்ட வெடி விபத்தில் பணியில் இருந்த வடமாநில தொழிலாளா்கள் சல்மான் (35), ராக்கேஷ் (39) ஆகியோா் பலத்த காயம் அடைந்தனா். இவா்கள் சேலம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த ராக்கேஷ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கருமலைக்கூடல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.