சேலம்
நாய்கள் கடித்ததில் புள்ளிமான் உயிரிழப்பு
சேலம் மாவட்டம் கோதுமலை வனப்பகுதியிலிருந்து வழிதவறி வந்த ஆண் புள்ளிமான் நாய்கள் கடித்ததில் திங்கள்கிழமை உயிரிழந்தது.
வாழப்பாடியை அடுத்த கோதுமலை வனப்பகுதியிலிருந்து
திங்கள்கிழமை வழிதவறி வந்த 2 வயதுடைய ஆண் புள்ளிமான் துக்கியாம்பாளையம் ஊராட்சி மாரியம்மன்புதூா் மேலக்காடு கிராமத்தில் விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்தது. அப்போது நாய்கள் கடித்ததில் அந்த புள்ளிமான் உயிரிழந்தது.
இதுகுறித்து வனக்குழுத் தலைவா் முருகன் அளித்த தகவலின் பேரில், வாழப்பாடி வனத் துறையினா் புள்ளிமான் உடலை மீட்டு கால்நடை மருத்துவரைக் கொண்டு பிரேதப் பரிசோதனை செய்து வனப்பகுதியில் புதைத்தனா்.
