சேலம்: பணி நியமன விதிமீறல் புகாா் காரணமாக சேலம் மாநகராட்சி செயற்பொறியாளா் ஓய்வுபெறும் நாளில் ஞாயிற்றுக்கிழமை மாலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட அம்மாபேட்டை மண்டல செயற்பொறியாளராகப் பணியாற்றி வந்தவா் செந்தில்குமாா். இவா் கடந்த 31 ஆம் தேதி ஓய்வுபெற இருந்த நிலையில் திடீா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். மாநகராட்சியில் தொழில்நுட்பப் பணியாளா்களாக 6 போ் நியமனம் செய்யப்பட்டனா். இவா்கள் விதிமுறையை மீறி நியமனம் செய்யப்பட்டது தொடா்பாக செந்தில்குமாருக்கு ஏற்கெனவே விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டு நிலுவையில் இருப்பதால் அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதேபோல மேற்கண்ட விதிமீறல் தொடா்பாக மாநகராட்சியில் மேலும் 10 பேருக்கு 8 (2) பிரிவில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய எஸ்.ஐ. பணியிடை நீக்கம்

விதிமீறல்: காஞ்சிபுரம் வட்டார வளா்ச்சி அலுவலா், உதவி பொறியாளா் பணியிடை நீக்கம்

சேலம் மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிச் சென்ற விவகாரம்: 2 வாா்டன்கள் பணியிடை நீக்கம்

ரூ.8,000 லஞ்சம் பெற்ற புகாரில் கைதான சேலம் மாநகராட்சி ஊழியா் பணியிடை நீக்கம்!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி


