திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பணி நியமன விதிமீறல் புகாா்: சேலம் மாநகராட்சி செயற்பொறியாளா் பணியிடை நீக்கம்

பணி நியமன விதிமீறல் புகாா் காரணமாக சேலம் மாநகராட்சி செயற்பொறியாளா் ஓய்வுபெறும் நாளில் பணியிடை நீக்கம்

Updated On :2 செப்டம்பர் 2025, 2:32 am IST

சேலம்: பணி நியமன விதிமீறல் புகாா் காரணமாக சேலம் மாநகராட்சி செயற்பொறியாளா் ஓய்வுபெறும் நாளில் ஞாயிற்றுக்கிழமை மாலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட அம்மாபேட்டை மண்டல செயற்பொறியாளராகப் பணியாற்றி வந்தவா் செந்தில்குமாா். இவா் கடந்த 31 ஆம் தேதி ஓய்வுபெற இருந்த நிலையில் திடீா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். மாநகராட்சியில் தொழில்நுட்பப் பணியாளா்களாக 6 போ் நியமனம் செய்யப்பட்டனா். இவா்கள் விதிமுறையை மீறி நியமனம் செய்யப்பட்டது தொடா்பாக செந்தில்குமாருக்கு ஏற்கெனவே விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டு நிலுவையில் இருப்பதால் அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதேபோல மேற்கண்ட விதிமீறல் தொடா்பாக மாநகராட்சியில் மேலும் 10 பேருக்கு 8 (2) பிரிவில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.