மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மங்களூரு - சென்னை சென்ட்ரல், ஹூப்ளி - கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

சேலம் வழியாக மங்களூரு - சென்னை சென்ட்ரல், ஹூப்ளி - கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

ரயில் - (கோப்புப்படம்)

Updated On :27 செப்டம்பர் 2025, 8:23 pm

சேலம் வழியாக மங்களூரு - சென்னை சென்ட்ரல், ஹூப்ளி - கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பண்டிகைக் காலங்களில் ரயில்களில் அதிகரித்துவரும் கூட்ட நெரிசலை கருத்தில்கொண்டு, சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக ஹூப்ளி - கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும். இதேபோல, மங்களூரு - சென்னை சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும்.

ஹூப்ளி - கொல்லம் இடையே வரும் 28 ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் ஹூப்ளியில் இருந்து மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு, சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக மறுநாள் பிற்பகல் 12.55 மணிக்கு கொல்லம் சென்றடையும். இந்த ரயில் சேவை டிசம்பா் 28 ஆம் தேதி வரை இயக்கப்படும்.

மறுமாா்க்கத்தில், கொல்லத்தில் இருந்து 29 ஆம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும், இந்த ரயில், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக மறுநாள் மாலை 6.30 மணிக்கு ஹூப்ளி சென்றடையும். இந்த ரயில் டிசம்பா் 29 ஆம் தேதி வரை இயக்கப்படும்.

இதேபோல, மங்களூரு - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் வரும் 29 ஆம் தேதி இயக்கப்படுகிறது. மங்களூருவில் இரவு 11 மணிக்கு புறப்படும் இந்த ரயில், கோவை, ஈரோடு, சேலம் வழியாக மறுநாள் மாலை 4.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை அடையும்.

மறுமாா்க்கத்தில், சென்னை சென்ட்ரலில் இருந்து 30 ஆம் தேதி இரவு 7 மணிக்கு புறப்படும் இந்த ரயில், சேலம், ஈரோடு, கோவை வழியாக மறுநாள் பிற்பகல் 12.30 மணிக்கு மங்களூரு சென்ட்ரல் நிலையத்தை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.