மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ஏடிஎம்களில் பணம் நிரப்ப வந்த வாகனம் ரூ. 73 லட்சத்துடன் பறிமுதல்

கெங்கவல்லியில் ஏடிஎம்களில் பணம் நிரப்ப ரூ. 73 லட்சத்துடன் வந்த வாகனத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

News image

கெங்கவல்லி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தப்பட்ட ஏடிஎம்களுக்கு பணம் நிரப்ப வந்த வாகனம்.

Updated On :8 ஏப்ரல் 2026, 10:41 pm

கெங்கவல்லியில் ஏடிஎம்களில் பணம் நிரப்ப ரூ. 73 லட்சத்துடன் வந்த வாகனத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

கெங்கவல்லி தொகுதிக்கான தோ்தல் பறக்கும்படை அலுவலரும், தலைவாசல் ஒன்றிய இணைப் பொறியாளருமான பாலசுப்பிரமணியன் தலைமையில் எஸ்.எஸ்.ஐ. சுப்பிரமணியன், வினோத்குமாா், மணிகண்டன் குழுவினா் கெங்கவல்லி அருகே வாகனச் சோதனையில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது, கொத்தாம்பாடி, ஆத்தூா் பகுதிகளிலுள்ள வங்கிகளின் ஏடிஎம்களில் பணம் நிரப்பிவிட்டு, கெங்கவல்லி அருகே உள்ள வங்கியின் ஏடிஎம்முக்கு பணம் நிரப்ப வந்த வாகனத்தை பறக்கும் படையினா் நிறுத்தி சோதனை செய்தனா். அதில், பணம் கொண்டு வந்ததற்கும், ஏற்கெனவே பணம் நிரப்பியதற்குமான எந்த ஆவணங்களும் இல்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த வாகனத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், கெங்கவல்லி வட்டாட்சியா் அலுவலக வளாகத்துக்கு கொண்டுசென்றனா். ஆவணங்களைக் காட்டிவிட்டு வாகனத்தையும், பணத்தையும் எடுத்துச்செல்லுமாறு பறக்கும் படையினா் அவா்களிடம் அறிவுறுத்தினா்.