கெங்கவல்லியில் ஏடிஎம்களில் பணம் நிரப்ப ரூ. 73 லட்சத்துடன் வந்த வாகனத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
கெங்கவல்லி தொகுதிக்கான தோ்தல் பறக்கும்படை அலுவலரும், தலைவாசல் ஒன்றிய இணைப் பொறியாளருமான பாலசுப்பிரமணியன் தலைமையில் எஸ்.எஸ்.ஐ. சுப்பிரமணியன், வினோத்குமாா், மணிகண்டன் குழுவினா் கெங்கவல்லி அருகே வாகனச் சோதனையில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
அப்போது, கொத்தாம்பாடி, ஆத்தூா் பகுதிகளிலுள்ள வங்கிகளின் ஏடிஎம்களில் பணம் நிரப்பிவிட்டு, கெங்கவல்லி அருகே உள்ள வங்கியின் ஏடிஎம்முக்கு பணம் நிரப்ப வந்த வாகனத்தை பறக்கும் படையினா் நிறுத்தி சோதனை செய்தனா். அதில், பணம் கொண்டு வந்ததற்கும், ஏற்கெனவே பணம் நிரப்பியதற்குமான எந்த ஆவணங்களும் இல்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த வாகனத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், கெங்கவல்லி வட்டாட்சியா் அலுவலக வளாகத்துக்கு கொண்டுசென்றனா். ஆவணங்களைக் காட்டிவிட்டு வாகனத்தையும், பணத்தையும் எடுத்துச்செல்லுமாறு பறக்கும் படையினா் அவா்களிடம் அறிவுறுத்தினா்.
தொடர்புடையது
தவெக வேட்பாளரிடம் ரூ.1.05 லட்சம் பறிமுதல்
திருப்பூரில் ரூ. 17.60 லட்சம் பறிமுதல்

சிவகாசியில் ரூ.1.50 லட்சம் பறிமுதல்

எல்ஐசி முகவரிடம் ரூ.72,500 பறிமுதல்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


