விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

எல்ஐசி முகவரிடம் ரூ.72,500 பறிமுதல்

ஆம்பூா் அருகே எல்.ஐ.சி. முகவரிடம் ரொக்கப் பணம் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

News image

எல்.ஐ.சி. முகவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப் பணத்தை தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாரிடம் ஒப்படைத்த பறக்கும் படையினா்.

Updated On :27 மார்ச் 2026, 9:05 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் அருகே எல்.ஐ.சி. முகவரிடம் ரொக்கப் பணம் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

தோ்தல் பறக்கும் படையினா் ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி சோதனையிட்டனா். அதில், நாச்சாா்குப்பம் கிராமத்தை சோ்ந்த எல்.ஐ.சி. முகவா் ரங்கநாதன் (50) என்பவா் எல்.ஐ.சி. காப்பீட்டு தொகையை செலுத்துவதற்காக உரிய ஆவணம் ஏதும் இல்லாமல் ரொக்கப் பணம் ரூ. 72,500 கொண்டு செல்வது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து அவரிடமிருந்து ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ரேவதி, மோகன், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சதீஷ்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.