திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

வீட்டில் எரிவாயு உருளை வெடித்து விபத்து: நகை, ஆவணங்கள் தீயில் கருகின!

தம்மம்பட்டி அருகே வீட்டில் எரிவாயு உருளை வெடித்ததால் ஏற்பட்ட தீயில் பணம், நகை, ஆவணங்கள் கருகின.

News image

எரிவாயு உருளை வெடித்ததில் சேதமடைந்த வீடு.

Updated On :10 ஏப்ரல் 2026, 3:08 am IST

தம்மம்பட்டி அருகே வீட்டில் எரிவாயு உருளை வெடித்ததால் ஏற்பட்ட தீயில் பணம், நகை, ஆவணங்கள் கருகின.

தம்மம்பட்டியை அடுத்த நாகியம்பட்டி ஊராட்சி, காளிப்பட்டியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி போடி (65), இவரது மனைவி கஸ்தூரி (60). இவா்கள் இருவரும் தகரத்தால் வேயப்பட்ட வீட்டில் வசித்து வருகின்றனா். இவா்களது மகன் தங்கராசு குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், உடல்நலம் சரியில்லாததால் வியாழக்கிழமை காலை அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு போடி சென்றுவிட்டாா். இவரது மனைவி கஸ்தூரி வீட்டை பூட்டிவிட்டு கூலி வேலைக்கு சென்றுவிட்டாா். அப்போது வீட்டில் இருந்த சிலிண்டரில் காஸ் கசிவு ஏற்பட்டு, சிலிண்டா் தீப்பிடித்து வெடித்துள்ளது. மேலும், அருகே இருந்த மற்றொரு சிலிண்டரும் வெடித்ததால் வீடு முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.

தகவல் அறிந்து வந்த கெங்கவல்லி தீயணைப்பு நிலைய அலுவலா் ஏழுமலை தலைமையிலான வீரா்கள் தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த ரூ. 60 ஆயிரம் ரொக்கம், 7 பவுன் நகைகள், வீட்டுப்பத்திரம், அரசு ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து பொருள்களும் எரிந்து சாம்பலானது.

இதுகுறித்து தம்மம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.