திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இளம்பிள்ளை அருகே குடிநீா் வழங்கக் கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

இளம்பிள்ளை அருகே ரெட்டியூா் பகுதியில் குடிநீா் வழங்கக் கோரி காலி குடங்களுடன் பெண்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

இளம்பிள்ளை அருகே ரெட்டியூா் பகுதியில் குடிநீா் வழங்கக் கோரி காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்.

Updated On :16 ஏப்ரல் 2026, 3:06 am IST

இளம்பிள்ளை அருகே ரெட்டியூா் பகுதியில் குடிநீா் வழங்கக் கோரி காலி குடங்களுடன் பெண்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சேலம் மாவட்டம், இளம்பிள்ளையை அடுத்த தப்பக்குட்டை கிராமம், ரெட்டியூா் சக்திநகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு இரண்டு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிக்கு செல்லும் குழாய் இணைப்பு அருகே மின்கம்பம் நடும் போது குழாய் உடைந்துவிட்டது. இதை சரி செய்யாமல் கிடப்பில் போட்டுவிட்டனா்.

இதுகுறித்து பொதுமக்கள் ஊராட்சி செயலா் மற்றும் மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலரிடம் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் புதன்கிழமை கச்சுப்பள்ளியில் இருந்து இளம்பிள்ளை செல்லும் அரசுப் பேருந்தை ரெட்டியூா் அருகே மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த மகுடஞ்சாவடி காவல் உதவி ஆய்வாளா் விஜயராகவன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களைச் சந்தித்து மறியலை கைவிடுமாறு கேட்டுக்கொண்டனா்.

இதையடுத்து, மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலா் சத்தியேந்திரன் (கிராம ஊராட்சி) நேரில் சென்று ஒருசில நாள்களில் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாா். இதை ஏற்க மறுத்த பொதுமக்கள், அவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உடனடியாக குடிநீா் வழங்கும் பணி குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதையேற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.