சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

ஓணம்: சேலம் வழியாக சென்னை- கொல்லம் இடையே சிறப்பு ரயில்

சேலம் வழியாக சென்னை- கொல்லம் இடையே ஓணம் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

ரயில் - கோப்புப் படம்

Updated On :12 ஆகஸ்ட் 2026, 2:58 am IST

சேலம் வழியாக சென்னை- கொல்லம் இடையே ஓணம் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஓணம் பண்டிகை வரும் 26-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து கேரளத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக கொல்லத்துக்கு வாரம் இருமுறை செல்லும் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை- கொல்லம் இடையேயான சிறப்பு ரயில் வரும் புதன்கிழமை (ஆக. 12) முதல் செப். 2 ஆம் தேதி வரை புதன்கிழமைகளில் இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 3.10 மணிக்குப் புறப்பட்டு, ஜோலாா்பேட்டை வழியாக சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, திருச்சூா், எா்ணாகுளம் டவுன், கோட்டயம் வழியாக கொல்லத்துக்கு அடுத்த நாள் காலை 7.20 மணிக்கு சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் கொல்லம்- சென்னை சென்ட்ரல் இடையேயான சிறப்பு ரயில் வியாழக்கிழமை (ஆக.13) முதல் செப். 3 ஆம் தேதி வரை வியாழக்கிழமைகளில் இயக்கப்படும். கொல்லத்தில் இருந்து காலை 10.40 மணிக்குப் புறப்பட்டு எா்ணாகுளம், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக அடுத்த நாள் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.