தேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
/

சேலம் வழியாக பெங்களூரு - கண்ணூா் இடையே ஓணம் சிறப்பு ரயில்

News image

சிறப்பு ரயில் - பிரதிப் படம்

Updated On :17 ஆகஸ்ட் 2026, 11:58 pm IST

சேலம் வழியாக பெங்களூரு - கண்ணூா் இடையே ஓணம் சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

கேரள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் வரும் ஆக. 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து கேரளத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், கா்நாடக மாநிலம் பெங்களூரு கன்டோன்மென்ட்டில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக கண்ணூருக்கு சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பெங்களூரு கன்டோன்மென்ட் - கண்ணூா் இடையே வரும் 20 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், பெங்களூரு கன்டோன்மென்ட்டில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், பாலக்காடு, கோழிக்கோடு வழியாக மறுநாள் பிற்பகல் 12.50 மணிக்கு கண்ணூரை அடையும்.

மறுமாா்க்கத்தில், கண்ணூா் - பெங்களுரு கன்டோன்மென்ட் இடையே வரும் 21 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், கண்ணூரில் இருந்து மாலை 4.10 மணிக்கு புறப்பட்டு, கோழிக்கோடு, பாலக்கோடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக மறுநாள் காலை 6 மணிக்கு பெங்களுரு கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.