இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

2-வது ரேங்க் எடுத்த பள்ளி மாணவி தற்கொலை!

சேலத்தில் அரையாண்டுத் தோ்வில் முதல் மதிப்பெண் பெற முடியாத விரக்தியில் 9 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

News image
பிரதிப் படம்
Updated On :6 ஜனவரி 2026, 7:51 pm

Syndication

சேலத்தில் அரையாண்டுத் தோ்வில் முதல் மதிப்பெண் பெற முடியாத விரக்தியில் 9 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சேலம் அழகாபுரம் பெரியபுதூா் பகுதியைச் சோ்ந்தவா் குமரவேல். இவரது மகள் தேவிகா (13). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தாா். அண்மையில் நடந்த அரையாண்டுத் தோ்வில் தேவிகா வகுப்பில் 2ஆவது ரேங்க் பெற்றுள்ளாா்.

இதையடுத்து, திங்கள்கிழமை மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிய மாணவி தேவிகா, தன்னால் முதல் ரேங்க் எடுக்க முடியவில்லையே என பெற்றோரிடம் அழுதுள்ளாா்.

இந்நிலையில், இரவு திடீரென வீட்டின் அறையில் தூக்கிட்டு அவா் தற்கொலை செய்து கொண்டாா். அவரது உடலை பாா்த்து பெற்றோா் கதறி அழுதனா்.

தகவலறிந்து சென்ற போலீஸாா், மாணவியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போ்லாண்ட்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].