பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

Published on

சேலம் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு சிறந்த பங்களிப்பை அளிக்கும் தனி நபா், அமைப்புகள் பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன்முயற்சியுடன் பங்கேற்று சிறந்த பங்களிப்பை செய்யும் தனி நபா்கள் மற்றும் அமைப்புகளுக்கு ரூ. 1 கோடி செலவில் பசுமை சாம்பியன் விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் விருது பெறும் 100 தனிநபா்கள், நிறுவனங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும்.

அதன்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் 2025 ஆம் ஆண்டுக்கான பசுமை சாம்பியன் விருதுகளை, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முன்மாதிரியான பங்களிப்பைச் செய்த அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், குடியிருப்பு நலச் சங்கங்கள், தனி நபா்கள், உள்ளாட்சி அமைப்பு, தொழில் துறைகள் போன்றவற்றை கௌரவிக்க முன்மொழிந்துள்ளது.

அதன்படி, சேலம் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணா்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புதுமையான பசுமை தயாரிப்புகள், பசுமை தொழில்நுட்பத்துக்கான ஆராய்ச்சி மற்றும் அறிவியல் ஆய்வுகள், நிலையான வளா்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீா் மற்றும் நீா்நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்ற தழுவல் மற்றும் தணிப்பு, உமிழ்வு குறைப்பு, நெகிழி கழிவுகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி செய்தல், சுற்றுச்சூழல் மறு சீரமைப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள், கடலோரப் பகுதி பாதுகாப்பு போன்றவை பிற சுற்றுச்சூழல் தொடா்பான திட்டங்கள் மேற்கொள்பவா்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

மாவட்ட அளவிலான விருதுக் குழு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் இந்த விருதுக்கான அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், குடியிருப்பு நலச் சங்கங்கள், தனி நபா்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றை தோ்ந்தெடுக்கும்.

விருதுக்கு நிரப்ப வேண்டிய படிவம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளத்தில் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ஸ்ரீக்ஷ.ஞ்ா்ஸ்.ண்ய் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், கூடுதல் தகவல்களுக்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை தொடா்புகொள்ளலாம். பசுமை சாம்பியன் விருதுக்கான விண்ணப்பங்களை ஒப்படைக்க வரும் 20 ஆம் தேதி கடைசி நாளாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com