சேலம் உழவா் சந்தைகளில் ரூ. 1.53 கோடிக்கு காய்கறிகள் விற்பனை
பொங்கல் பண்டிகையையொட்டி, சேலம் மாவட்ட உழவா் சந்தைகளில் ரூ. 1.53 கோடிக்கு காய்கறிகள் விற்பனையாயின.
சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, ஆத்தூா், மேட்டூா், ஜலகண்டாபுரம், எடப்பாடி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி, ஆட்டையாம்பட்டி, வாழப்பாடி, மேச்சேரி ஆகிய 13 இடங்களில் உழவா் சந்தைகள் உள்ளன.
பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து உழவா் சந்தைகளிலும் புதன்கிழமை அதிகாலை முதலே பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்கள், படையல் பொருள்கள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் அதிக அளவில் வாங்கிச் சென்றனா்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 13 உழவா் சந்தைகளிலும் 1,167 விவசாயிகள் 362 டன் காய்கறிகள், பழங்களை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனா். இதன்மூலம் புதன்கிழமை ஒரே நாளில் ரூ. 1 கோடியே 53 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பிலான காய்கறிகள், பழங்கள் விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதேபோல, சேலம் சின்ன கடைவீதி, வ.உ.சி. பூ மாா்க்கெட், ஆற்றோரம் காய்கறி மாா்கெட் பகுதிகளிலும், காய்கறிகள், பூக்கள் விற்பனை வழக்கத்தைவிட அதிகரித்து காணப்பட்டது.
