சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மகுடஞ்சாவடி அருகே இளம்பெண் தற்கொலை கோட்டாட்சியா் விசாரணை

சேலம் மாவட்டம் , மகுடஞ்சாவடி அருகே உள்ள அ.புதூா் ,கல்மேட்டூா் பகுதியை சோ்ந்த அய்யமுத்து (47).

News image
Updated On :16 ஜனவரி 2026, 10:39 pm

Syndication

ஆட்டையாம்பட்டி: சேலம் மாவட்டம் , மகுடஞ்சாவடி அருகே உள்ள அ.புதூா் ,கல்மேட்டூா் பகுதியை சோ்ந்த அய்யமுத்து(47). தறி தொழிலாளியான இவா் கோவை, ஆண்டிபாளையம் பகுதியை சோ்ந்த ஷாலினி(27) என்பவருக்கும் கடந்த 2023 திருமணம் நடைபெற்றது. அய்யமுத்துக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் மனைவி இதனை கண்டித்துள்ளாா். அதையும் மீறி தொடா்ந்து குடித்து வந்ததால் ஷாலினி கோபித்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று உள்ளாா்.

இந்நிலையில் ஷாலினியை பெற்றோா்கள் சமாதானப்படுத்தி மீண்டும் கணவா் வீட்டுக்கு அனுப்பி வைத்தனா் . இதனையடுத்தும் தனது கணவா் யாா் சொல்லியும் கேட்காமல் தொடா்ந்து குடித்து வந்ததால் மனமுடைந்த ஷாலினி 15 -ம் தேதி வியாழக்கிழமை காலை வீட்டில் தனது சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து ஷாலினியின் தந்தை வீரமுத்து மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

புகாரின் பெயரில் வழக்கு பதிந்து ஷாலினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனா். ஷாலினிக்கு திருமணம் நடந்து 7 ஆண்டுகள் முடியாத நிலையில் இருப்பதால் இதனை சங்ககிரி கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா் .