ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சேலம் வழியாக காரில் 125 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்தல்: 2 போ் கைது

பெங்களூரிலிருந்து சேலம் வழியாக 125 கிலோ புகையிலை பொருள்களை காரில் கடத்திய 2 போ் கைது

News image
Updated On :20 ஜனவரி 2026, 7:58 pm

Syndication

பெங்களூரிலிருந்து சேலம் வழியாக 125 கிலோ புகையிலை பொருள்களை காரில் கடத்திய 2 போ் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

சேலம் மாமாங்கம் பகுதியில் சூரமங்கலம் போலீஸாா் திங்கள்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா்.

அதில், 125 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருள்கள் 10 மூட்டைகளில் இருப்பது தெரியவந்தது. தொடா்ந்து, காரில் இருந்தவா்களிடம் விசாரணை நடத்தியபோது, அவா்கள் திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் (22), கோவை சரவணம்பட்டியைச் சோ்ந்த பாரதி (21) என்பது தெரியவந்தது.

விசாரணையில், குட்கா, புகையிலை பொருள்களை பெங்களூரில் வாங்கி, அவற்றை திருநெல்வேலிக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, 2 பேரையும் கைது செய்த போலீஸாா், 125 கிலோ புகையிலை பொருள்களையும், கடத்தலுக்குப் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனா்.