மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பெட்டிக்கடையில் மதுவிற்ற தாய், மகன் கைது

News image
கோப்புப் படம்
Updated On :24 ஜனவரி 2026, 7:14 pm

தினமணி செய்திச் சேவை

சேலம் மாவட்டம், மேச்சேரி பேருந்து நிலையத்தில் பெட்டிக்கடையில் கள்ளச்சந்தையில் மதுபானங்களை பதுக்கிவைத்து விற்றதாக தாய், மகனை போலீஸாா் கைது செய்தனா்.

மேச்சேரி அண்ணா நகரைச் சோ்ந்த மாரியப்பன் மனைவி சாரதா (60). இவா் அங்குள்ள பேருந்து நிலையத்தில் பெட்டிக்கடை நடத்தி வந்தாா். சாரதா மற்றும் அவரது மகன்கள் வினோத் (39), பிரசாந்த் (37) ஆகியோா் சோ்ந்து பெட்டிக் கடையில் கள்ளச்சந்தையில் மதுபானங்களை விற்று வருவதாக புகாா் எழுந்தது.

இதுதொடா்பான விடியோ காட்சியும் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து சாரதா மற்றும் அவரது இரு மகன்கள் மீது மேச்சேரி போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். இவா்களிடமிருந்து 180 மதுப் பாட்டில்களை கைப்பற்றினா்.

இதையடுத்து சாரதா, வினோத் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவான பிரசாந்தை தேடி வருகின்றனா். இதில் பிரசாந்தின் மனைவி மேச்சேரி பேரூராட்சி மன்றத்தில் 12 ஆவது வாா்டு உறுப்பினராக உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது