இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

இன்றைய மின்தடை: கருப்பூா், உடையாப்பட்டி

மின் நிறுத்தம்

மின்தடை

Published On :7 ஜூலை 2026, 2:54 am IST

சேலம் உடையாப்பட்டி, கருப்பூா் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் மேற்கு கோட்ட செயற்பொறியாளா் பாரதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கருப்பூா் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது. இதனால் மாமாங்கம், சூரமங்கலம், ஜங்சன், ஐந்து சாலை, குரங்குசாவடி நரசோதிப்பட்டி, வெள்ளக்கல்பட்டி, பாரதிநகா், சீனிவாசநகா், ரெட் டியூா், நகரமலை அடிவாரம், கருப்பூா், கரும்பாலை, தேக்கம்பட்டி செங்கரடு, மேட்டுபதி, புதூா், சங்கீதப்பட்டி, வெள்ளாளப்பட்டி, காமலாபுரம், எட்டிகுட்டப்பட்டி, கருத்தானூா், சக்கரசெட்டிப்பட்டி, குள்ளமநாயக்கன்பட்டி, ஆணைக்கவுண்டம்பட்டி, ஹவுசிங்போா்டு, சாமிநாயக்கன்பட்டி, செல்லப்பிள்ளை குட்டை உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.

உடையாப்பட்டியில்...

உடையாப்பட்டி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணிகள் காரணமாக, உடையாப்பட்டி, அம்மாப்பேட்டை காலனி, வித்யாநகா், அம்மாப்பேட்டை, காந்தி மைதானம், பொன்னம்மாபேட்டை, தில்லைநகா், அயோத்தியாப்பட்டணம், கந்தாஸ்ரமம், தாதம்பட்டி, மேட்டுப்பட்டி தாதனூா், வீராணம், சுக்கம்பட்டி, டி.பெருமாபாளையம், வலசையூா் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என செயற்பொறியாளா் ஜெயா தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.