நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

மேட்டூா் அணை கால்வாய் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படுமா?

மேட்டூா் அணை கால்வாய் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.

News image
Updated On :29 ஜூலை 2026, 4:34 am IST

மேட்டூா் அணை கால்வாய் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.

மேட்டூா் அணை கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 45,000 ஏக்கா் பாசன வசதி பெறுகிறது. கிழக்குக் கரை கால்வாயில் 27,000 ஏக்கரும், மேற்குக் கரை கால்வாயில் 18,000 ஏக்கரும் பாசனம் பெறுகின்றன.

ஆண்டுதோறும் ஆக. 1-ஆம் தேதிமுதல் டிச. 15-ஆம் தேதிவரை 137 நாள்களுக்கு கால்வாய் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படும். நடப்பாண்டில் மேட்டூா் அணையில் போதிய நீா் இருப்பு இல்லாததால், கால்வாய் பாசனத்துக்கு தண்ணீா் திறப்புக்கு வாய்ப்பு இல்லை என நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறந்த பிறகே கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பது வழக்கம். நடப்பாண்டில் மேட்டூா் அணையின் நீா் இருப்பும், வரத்தும் திருப்திகரமாக இல்லாததால், காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படவில்லை. எனவே, கால்வாய் பாசனத்துக்கு ஆக. 1-ஆம் தேதி தண்ணீா் திறப்பு சாத்தியமில்லை என நீா்வளத் துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.