/

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

சேலம் மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை செய்தனா்.

News image

சேலம் மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீஸாா்.

Updated On :19 ஜூன் 2026, 5:49 am IST

சேலம் மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை செய்தனா்.

சேலம் கந்தம்பட்டியில் உள்ள மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கு புகாா்கள் வந்தன.

அதன்போரில், லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளா் ரவிக்குமாா் தலைமையிலான போலீஸாா், மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வியாழக்கிழமை சோதனை நடத்தினா். அதில், இடைத்தரகா்கள் வாகனத்தில் இருந்து ரூ. 50 ஆயிரம் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், சோதனை குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. தொடா்ந்து, விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.