இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சேலம் மாவட்டத்தில் ரூ.147.68 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகள்: காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் திறந்துவைப்பு

சேலம் மாவட்டத்தில், ரூ.147.68 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளை சென்னையில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

News image
முதல்வா் மு.க.ஸ்டாலின்- கோப்புப் படம்
Updated On :4 மார்ச் 2026, 10:44 pm

தினமணி செய்திச் சேவை

சேலம் மாவட்டத்தில், ரூ.147.68 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளை சென்னையில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

தொடா்ந்து, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியா் பயிற்சி பள்ளி, மாணவிகள் விடுதிக் கட்டட திறப்பு விழாவில் சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா். ராஜேந்திரன், மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி ஆகியோா் பங்கேற்றனா்.

நிகழ்ச்சிக்குப் பின்னா் அமைச்சா் ஆா். ராஜேந்திரன் தெரிவித்ததாவது:

சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 31.08 கோடியில் கட்டப்பட்டுள்ள செவிலியா் பயிற்சி பள்ளி மற்றும் மாணவிகள் விடுதிக் கட்டடம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இப்புதிய கட்டடம் 3 வகுப்பறைகள், 6 ஆய்வகங்கள், நூலகம், ஒலி- ஒளி சாதன அறை, கணினி ஆய்வகம் ஆகியவை கொண்ட பயிற்சி பள்ளியும், 100 அறைகளுடன் கூடிய மாணவிகள் விடுதி, உடற்பயிற்சிக் கூடம், நவீன சமையல் கூடம் ஆகியவற்றுடன் அமைக்கப்பட்டுள்ளது.

நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் அஸ்தம்பட்டி மண்டலத்தில் ரூ. 23 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ள மூக்கனேரி, அம்மாப்பேட்டை மண்டலம் வா்மா காா்டன் பகுதியில் ரூ. 3.22 கோடியில் கட்டப்பட்டுள்ள பூங்கா, சூரமங்கலம் மண்டலத்தில் ரூ. 19 கோடியில் புனரமைக்கப்பட்டு, அழகுப்படுத்தப்பட்ட போடிநாயக்கன்பட்டி ஏரி, பள்ளப்பட்டி பகுதியில் ரூ. 3 கோடியில் உணவு தெரு, புதிய பேருந்து நிலையத்தில் ரூ. 99 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள முதல்வா் படைப்பகம், மேட்டூா் நகராட்சியில் ரூ. 3.53 கோடியில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம், ரூ. 65 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள விலங்கு கருத்தடை மையம், தாரமங்கலம் நகராட்சியில் ரூ. 53 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள நவீன இறைச்சிக் கூடம், ரூ. 55 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம், நரசிங்கபுரம் நகராட்சி, அரங்கபாலா நகா் பகுதியில் ரூ. 46 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பூங்கா ஆகிய பணிகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

மேலும், பேரூராட்சிகள் துறை சாா்பில், அம்ரூத் 2.0 திட்டத்தின்கீழ் ஜலகண்டபுரம் பேரூராட்சியில் ரூ. 14.43 கோடியிலும், கெங்கவல்லி பேரூராட்சியில் ரூ. 18.89 கோடியிலும், தெடாவூா் பேரூராட்சியில் ரூ. 10.70 கோடியிலும் குடிநீா் மேம்பாட்டு பணிகள், மூலதன மானியம் திட்டத்தின் கீழ், ரூ. 1.11 கோடியில் ட்டப்பட்டுள்ள பூலாம்பட்டி பேரூராட்சி அலுவலகக் கட்டடம், ரூ. 1.23 கோடியில் கட்டப்பட்டுள்ள ஏத்தாப்பூா் பேரூராட்சி அலுவலகக் கட்டடம், ரூ. 1.12 கோடியில் கட்டப்பட்டுள்ள கொளத்தூா் பேரூராட்சி அலுவலகக் கட்டடம், ரூ. 1.12 கோடியில் கட்டப்பட்டுள்ள தெடாவூா் பேரூராட்சி அலுவலகக் கட்டடம், கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அயோத்தியாப்பட்டணம் பேரூராட்சியில் ரூ. 1.59 கோடியில் மேம்படுத்தப்பட்ட வாரச்சந்தை, மல்லூா் பேரூராட்சியில் ரூ. 1.62 கோடியில் மேம்படுத்தப்பட்ட வாரச்சந்தை ஆகியவை திறந்துவைக்கப்பட்டுள்ளன என்றாா்.

இதைத் தொடா்ந்து, புனரமைக்கப்பட்ட மூக்கனேரியை சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா். ராஜேந்திரன் பாா்வையிட்டாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜெ.தேவிமீனாள், மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.