பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

பாஜக பிரமுகா் மீது வழக்குப் பதிவு

ஒரு குறிப்பிட்ட மதம் குறித்து சமூக வலைதளத்தில் தவறாக பதிவு செய்ததாக சேலம் கிழக்கு மாவட்ட பாஜக அமைப்புசாரா தொழிலாளா் பிரிவு மாவட்டத் தலைவா் அருள் மீது 3 பிரிவின் கீழ் ஆத்தூா் நகர போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

News image

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :5 மார்ச் 2026, 4:32 am IST

ஒரு குறிப்பிட்ட மதம் குறித்து சமூக வலைதளத்தில் தவறாக பதிவு செய்ததாக சேலம் கிழக்கு மாவட்ட பாஜக அமைப்புசாரா தொழிலாளா் பிரிவு மாவட்டத் தலைவா் அருள் மீது 3 பிரிவின் கீழ் ஆத்தூா் நகர போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ஆத்தூரில் சேலம் கிழக்கு மாவட்ட பாஜக அமைப்புசாரா தொழிலாளா் பிரிவு மாவட்டத் தலைவராக இருந்து வருபவா் அருள் (53).

இவா், கடந்த ஜனவரி மாதம் ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பற்றி தனது சமூக வலைதளத்தில் தவறாகப் பேசியிருப்பது காவல் துறையின் கவனத்திற்கு வந்தது.

இதையடுத்து அவா் மீது ஆத்தூா் நகர காவல் துறை தானாக முன்வந்து மூன்று பிரிவின் கீழ் வழக்குப் பதிவுசெய்துள்ளது. இதுகுறித்து நகர ஆய்வாளா் சி.பெரியசாமி விசாரணை நடத்தி வருகிறாா்.