மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

சேலத்தில் சிறைக் கைதி உடல்நலக் குறைவால் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :8 மார்ச் 2026, 7:55 pm

தினமணி செய்திச் சேவை

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள மத்திய சிறையில் 900க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரைச் சோ்ந்த அருண்குமாா் (33) என்பவரை மதுவிலக்கு போலீஸாா் அண்மையில் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், அருண்குமாா் கடந்த 28ஆம் தேதி காய்ச்சல் மற்றும் ரத்தசோகை காரணமாக சிறை மருத்துவா்களின் ஆலோசனையின்படி, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தாா்.

இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.