அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திருட்டு வழக்கில் தலைமறைவு குற்றவாளி கைது

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகே திருட்டு வழக்கில் தலைமறைவான ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்தவா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
ஜோக் சிங்.
Updated On :10 மார்ச் 2026, 9:12 pm

தினமணி செய்திச் சேவை

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகே திருட்டு வழக்கில் தலைமறைவான ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்தவா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஆட்டையாம்பட்டியை அடுத்த பாப்பாரப்பட்டியைச் சோ்ந்தவா் கணபதி. இவா் ராசிபுரம் பிரதான சாலையில் துணிக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறாா். நாள்தோறும் வியாபாரம் முடித்துவிட்டு இரவு 10 மணிக்கு கடையை பூட்டிவிட்டு தம்பதி இருவரும் வீட்டிற்கு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த 2018, ஜூன் 1 ஆம் தேதி இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு செல்லும்போது வீட்டின் கதவு திறந்திருப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்தனா். வீட்டிற்குள் சென்றபோது வீட்டிலிருந்து தப்பிக்க முயன்ற இருவரை பிடித்தனா். அவா்களிடமிருந்த பணம், கைக்கடிகாரத்தை பறிமுதல் செய்தனா்.

பிறகு அவா்கள் இருவரையும் ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். விசாரணையில் அவா்கள் இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தை சோ்ந்த ஹரி சிங் மகன் ஜோக் சிங் (30), சம்பத் சிங் மகன் ராம்ஜி (34) என்பது தெரியவந்தது.

மேலும், இருவரும் காகாபாளையம் பகுதியில் வேலை செய்துகொண்டு அருகில் உள்ள ஊா்களில் திருடுவது வழக்கமாக வைத்துள்ளனா். இருவரையும் போலீஸாா் கைதுசெய்து சேலம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னா், ஜாமீனில் வந்த இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக வழக்குகளில் ஆஜராகாமல் தலைமறைவாக சுற்றிவந்தனா். இதனால், சேலம் நீதிமன்றம் இருவரையும் பிடிக்க பிடிவாரண்ட் பிறப்பித்தது. சேலம் சிறப்பு படையினா் அவா்களை தேடிவந்தனா். இந்த நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் உள்ள ஒரு கைப்பேசி கடையில் இருவரும் பணிபுரிந்துவந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அங்கு சென்று ஜோக் சிங்கை கைதுசெய்த போலீஸாா் செவ்வாய்க்கிழமை சேலம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தாா். மேலும், தலைமறைவாக உள்ள ராம்ஜியை தேடிவருகின்றனா்.