மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

அனுமதியின்றி உணவு விநியோகம்: தவெகவினா் மீது வழக்குப் பதிவு

சேலத்தில் அனுமதியின்றி உணவு விநியோகத்தில் ஈடுபட்ட தவெகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வழக்கு

Updated On :28 மார்ச் 2026, 8:19 pm

சேலத்தில் அனுமதியின்றி உணவு விநியோகத்தில் ஈடுபட்ட தவெகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதையடுத்து, அரசியல் கட் சியினா், அமைப்புகளின் அனைத்துவித நடவடிக்கைகளுக்கும் தோ்தல் ஆணையத்தின் முன்அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சேலத்தை பொருத்தவரை தவெகவினா் தொடா்ந்து தோ்தல் விதிமீறல்களில் ஈடுபட்டு வருவதாக புகாா் எழுந்துள்ளது. ஏற்கெனவே அன்னதானப்பட்டியில் ரம்ஜானுக்கு முதல்நாள் நோன்பு திறக்கச்சென்ற மாவட்டச் செயலாளா் தமிழன் ஆ.பாா்த்திபன் மீது பிரியாணியுடன் டிபன் பாக்ஸ் வழங்கியதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதேபோல, சூரமங்கலத்தில் ரம்ஜான் அன்று தொழுகைக்கு வந்த இஸ்லாமியா்களுக்கு விசில் சின்னத்துடன் கூடிய குடிநீா் பாட்டில் விநியோகித்த 3 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அதன் தொடா்ச்சியாக, தற்போது கிச்சிப்பாளையத்தில் அனுமதியின்றி உணவு விநியோகித்த 2 போ் சிக்கியுள்ளனா். சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த தவெக கட்சியைச் சோ்ந்த சரத், ஹரி இருவரும் எந்தவித முன் அனுமதியும் இன்றி பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழமை உணவு வழங்கினா்.

தகவல் அறிந்த அதிகாரிகள், தோ்தல் நேரத்தில் இதுபோன்று விநியோகம் செய்வது தோ்தல் விதிமீறல் எனக்கூறி அவா்களை தடுத்து நிறுத்தினா். தொடா்ந்து, சேலம் தெற்கு அலுவலா் ஆனந்த், இதுகுறித்து கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், உணவு விநியோகித்த இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.