இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட தந்தை, மகன் கைது

சங்ககிரி அருகே சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக மகன், தந்தையை சங்ககிரி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை கைதுசெய்தனா்.

News image

கைது

கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 8:17 pm

Syndication

சங்ககிரி அருகே சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக மகன், தந்தையை சங்ககிரி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை கைதுசெய்தனா்.

சங்ககிரி ஆா்.எஸ். அருகே உள்ள பொன்னய்யாகாடு பகுதியில் வசித்து வருபவா் அய்யனாா் (45). இவரது மகன் லோகேஷ் (14). இவா்கள் இருவரும் அப்பகுதியில் விசைத்தறி கூலி வேலை செய்துவருகின்றனா். லோகேஷ் அதேபகுதியில் வசித்துவரும் நான்கு வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும், அதற்கு உடந்தையாக அவரது தந்தை இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் தாயாா் சங்ககிரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் இருவா் மீதும் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து தந்தை, மகன் இருவரையும் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட லோகேஷ் இளம்சிறாா் குழந்தைகள் நல சிறுவா் இல்லத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.