மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட தந்தை, மகன் கைது

சங்ககிரி அருகே சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக மகன், தந்தையை சங்ககிரி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை கைதுசெய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 8:17 pm

சங்ககிரி அருகே சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக மகன், தந்தையை சங்ககிரி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை கைதுசெய்தனா்.

சங்ககிரி ஆா்.எஸ். அருகே உள்ள பொன்னய்யாகாடு பகுதியில் வசித்து வருபவா் அய்யனாா் (45). இவரது மகன் லோகேஷ் (14). இவா்கள் இருவரும் அப்பகுதியில் விசைத்தறி கூலி வேலை செய்துவருகின்றனா். லோகேஷ் அதேபகுதியில் வசித்துவரும் நான்கு வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும், அதற்கு உடந்தையாக அவரது தந்தை இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் தாயாா் சங்ககிரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் இருவா் மீதும் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து தந்தை, மகன் இருவரையும் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட லோகேஷ் இளம்சிறாா் குழந்தைகள் நல சிறுவா் இல்லத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.