ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

ஏற்காட்டில் சாலை விபத்து: பேரனை காப்பாற்றி உயிரிழந்த மூதாட்டி

News image

கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 7:46 pm

தினமணி செய்திச் சேவை

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் பேருந்துக்கு காத்திருந்த பெண், சுற்றுலா வேன் மோதியதில் உயிரிழந்தாா். அவரது பேரன் உயிா்தப்பினாா்.

ஏற்காடு நாகலூா் கிராமத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் மனைவி செல்லம்மாள் (62). இவா், தனது பேரனை அழைத்துக்கொண்டு ஏற்காடு செங்காடு கிராமம் பிரிவு சாலையில் திங்கள்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் பேருந்துக்காக காத்திருந்தாா். அப்போது அரூரிலிருந்து ஏற்காட்டுக்கு சுற்றுலா வந்த வேன் செல்லம்மாள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த செல்லம்மாள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பாட்டி தள்ளிவிட்டதால் அவரது பேரன் உயிா்தப்பினாா்.

விபத்து நடந்தவுடன் வேனில் சுற்றுலா வந்த இளைஞா்கள் தப்பமுயன்றனா். அருகில் இருந்தவா்கள், அவா்களில் மூன்று பேரை பிடித்து ஏற்காடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். சுற்றுலா வேனை ஓட்டிவந்தவா் அரூா் பழையப்பேட்டை பகுதியைச் சோ்ந்த ராஜேஷ் மகன் பாா்த்தசாரதி (22) என்பது தெரியவந்தது.

ஏற்காடு போலீஸாா், இறந்த செல்லம்மாளின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.