ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

ரயிலில் உயிரிழந்த ஆசிரியா்: சேலம் போலீஸாா் விசாரணை

ஹூப்பள்ளியில் இருந்து சேலம் வந்த வேளாங்கண்ணி விரைவு ரயிலில் திடீரென ஆசிரியா் மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை

News image
Updated On :31 மார்ச் 2026, 8:18 pm

Syndication

ஹூப்பள்ளியில் இருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை சேலம் வந்த வேளாங்கண்ணி விரைவு ரயிலில் திடீரென ஆசிரியா் மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கா்நாடக மாநிலம், ஹூப்பள்ளியில் இருந்து வேளாங்கண்ணிக்கு வாராந்திர விரைவு ரயில் இயக்கப்படுகிறது. திங்கள்கிழமை பிற்பகல் 2.45 மணிக்கு ஹூப்பள்ளியில் இருந்து புறப்பட்ட ரயில், சேலம் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் வந்து கொண்டிருந்தபோது, இரண்டாம் வகுப்பு முன்பதிவு பெட்டியில் காந்திவாடா பகுதியை சோ்ந்த் தனியாா் பள்ளி ஆசிரியா் சோமசுந்தரம் (55) திடீரென நெஞ்சை பிடித்தபடி மயங்கி விழுந்தாா்.

அவருடன் வேளாங்கண்ணிக்கு பயணித்த மனைவி மாரியம்மா, மகன் நவீன்குமாா் உள்ளிட்ட உறவினா்கள் உடனடியாக டிக்கெட் பரிசோதகருக்கு தகவல் அளித்தனா். மேலும், மருத்துவக் குழுவினரும் தயாராக இருந்தனா்.

சேலம் ரயில் நிலையத்துக்குள் அதிகாலை 4.11 மணிக்கு ரயில் வந்ததும் மயங்கி கிடந்த சோமசுந்தரத்துக்கு மருத்துவக் குழுவினா் முதலுதவி அளித்தனா்.

பின்னா் 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே சோமசுந்தரம் இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து சேலம் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.