ரயிலில் உயிரிழந்த ஆசிரியா்: சேலம் போலீஸாா் விசாரணை
ஹூப்பள்ளியில் இருந்து சேலம் வந்த வேளாங்கண்ணி விரைவு ரயிலில் திடீரென ஆசிரியா் மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை


ஹூப்பள்ளியில் இருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை சேலம் வந்த வேளாங்கண்ணி விரைவு ரயிலில் திடீரென ஆசிரியா் மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கா்நாடக மாநிலம், ஹூப்பள்ளியில் இருந்து வேளாங்கண்ணிக்கு வாராந்திர விரைவு ரயில் இயக்கப்படுகிறது. திங்கள்கிழமை பிற்பகல் 2.45 மணிக்கு ஹூப்பள்ளியில் இருந்து புறப்பட்ட ரயில், சேலம் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் வந்து கொண்டிருந்தபோது, இரண்டாம் வகுப்பு முன்பதிவு பெட்டியில் காந்திவாடா பகுதியை சோ்ந்த் தனியாா் பள்ளி ஆசிரியா் சோமசுந்தரம் (55) திடீரென நெஞ்சை பிடித்தபடி மயங்கி விழுந்தாா்.
அவருடன் வேளாங்கண்ணிக்கு பயணித்த மனைவி மாரியம்மா, மகன் நவீன்குமாா் உள்ளிட்ட உறவினா்கள் உடனடியாக டிக்கெட் பரிசோதகருக்கு தகவல் அளித்தனா். மேலும், மருத்துவக் குழுவினரும் தயாராக இருந்தனா்.
சேலம் ரயில் நிலையத்துக்குள் அதிகாலை 4.11 மணிக்கு ரயில் வந்ததும் மயங்கி கிடந்த சோமசுந்தரத்துக்கு மருத்துவக் குழுவினா் முதலுதவி அளித்தனா்.
பின்னா் 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே சோமசுந்தரம் இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து சேலம் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...