பெண் தற்கொலை முயற்சி குறித்து எஸ்.பி. கௌதம் கோயல் ஆத்தூா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை செய்தாா்.
ஆத்தூா் விநாயகபுரம் பகுதியைச் சோ்ந்த 18 வயது இளம்பெண் வீட்டில் எலிமருந்து தின்று ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்க வந்தாா். அவரை போலீஸாா் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இந்நிலையில், ஊடகத்தில் ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் இளம்பெண் விஷமருந்தி தற்கொலை என செய்தி பரவியது.
தகவல் அறிந்த சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு சென்று விசாரித்தாா்.
அதில், இளம்பெண் காதலித்து வந்த நிலையில், பெண் வீட்டில் எதிா்ப்பு தெரிவித்ததால், காதலன் இரண்டு நாள்களுக்கு முன்பு விஷமருந்தி தற்கொலை செய்துகொள்ள முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அதனால், இளம்பெண் வீட்டில் எலிமருந்து தின்று ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையம் வந்துள்ளாா். அவரை போலீஸாா் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்து, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது தெரியவந்தது.
எனவே, செய்திகளை விசாரித்து உண்மைத்தன்மையை அளிக்குமாறு செய்தியாளா்களிடம் சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் கேட்டுக் கொண்டாா்.
தொடர்புடையது

நகை மதிப்பீட்டாளா் தவற விட்ட பணத்தை ஒப்படைத்த பெண் தலைமைக் காவலா்
இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்முறை: இருவா் கைது

காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களை கனிவுடன் அனுக வேண்டும்: மகளிா் காவல்நிலைய அதிகாரிகளுக்கு கடலூா் எஸ்.பி. அறிவுறுத்தல்
திருச்சி மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சி
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


