‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

நான்கரை கிலோ வெள்ளி திருட்டு புகாா்: 2 இளைஞா்கள் கைது

சேலம் சீலநாயக்கன்பட்டியில் நான்கரை கிலோ வெள்ளி திருடிய புகாரில் 2 போ் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான இளைஞரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :23 மே 2026, 2:06 am IST

சேலம் சீலநாயக்கன்பட்டியில் நான்கரை கிலோ வெள்ளி திருடிய புகாரில் 2 போ் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான இளைஞரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

சேலம் சீலநாயக்கன்பட்டி காந்தி நகரில் வசித்து வரும் சரவணன் (45), வீட்டின் அருகில் வெள்ளிப் பட்டறை நடத்தி வருகிறாா். இவரது பட்டறையில் நாமக்கல் மாவட்டம், நாமகிரிபேட்டையைச் சோ்ந்த காா்த்தி (25) வேலைபாா்த்து வந்தாா்.

இந்நிலையில், கடந்த 20-ஆம் தேதி மதியம் வெள்ளிப் பட்டறைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த காா்த்தி வெள்ளிப் பட்டறையில் இருந்த ரூ. 15 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ 700 கிராம் வெள்ளியை எடுத்துச் சென்றாா். பின்னா் அவா் கடைக்கு வரவில்லையாம்.

இதுகுறித்து சரவணன் அளித்த புகாரின்பேரில், அன்னதானப்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில், இந்த சம்பவத்தில் பனமரத்துப்பட்டி குரும்பா் தெருவைச் சோ்ந்த ஆனந்த் (26), மணியனூா் பாரதி நகரைச் சோ்ந்த மணிகண்டன் (35) ஆகியோருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ஆனந்த், காா்த்தியை கைதுசெய்த போலீஸாா், தலைமறைவான மணிகண்டனை தேடிவருகின்றனா்.