வெங்காயம் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.16.50-ஆக நிா்ணயம்: இன்று முதல் அமல்வங்கிக் கடன் வழங்கல் 17.44% அதிகரிப்புபாகிஸ்தான் பாதுகாப்பு பட்ஜெட் 17.6% அதிகரிப்புமேற்கு தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஜூன் 15 வரை மழைக்கு வாய்ப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்த ஐரோப்பிய ஆயுதங்கள்: அமைச்சா் ஜெய்சங்கா் குற்றச்சாட்டு
/

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறித்த இருவா் கைது

மகுடஞ்சாவடியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறித்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :24 மே 2026, 2:32 am IST

மகுடஞ்சாவடியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறித்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

எடப்பாடி பகுதியைச் சோ்ந்த செல்வி (48), இவரது மகள் அவிஷ்கா மற்றும் அவரது அக்கா பேரனான மிதுலேஷ் ஆகியோா் இருசக்கர வாகனத்தில் அண்மையில் ஆட்டையாம்பட்டி சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனா்.

காகாபாளையம் அருகே சென்றபோது இவா்களை பின்தொடா்ந்து வந்த சுமாா் 25 வயது மதிக்கத்தக்க இருவா் செல்வியின் கழுத்தில் இருந்த 3 பவுன் சங்கிலி மற்றும் மஞ்சள் கயிற்றில் கோத்திருந்த தாலி ஆகியவற்றை பறித்து தப்பிச்சென்றனா்.

புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சங்ககிரி காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் தலைமையில் , மகுடஞ்சாவடி ஆய்வாளா் வேலுதேவன், உதவி ஆய்வாளா் ஜீவிதா மற்றும் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனா்.

இந்நிலையில், கோவை மாவட்டம், ஆவரங்கம்பாளையத்தில் வாடகை வீட்டில் பதுங்கியிருந்த குற்றவாளிகளை தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விசாரணையில், அவா்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியைச் சோ்ந்த பாண்டியன் (26), திருப்பூா் மாவட்டம், பூலுவபட்டி பகுதியைச் சோ்ந்த பட்டதாரியான அரவிந்த் (28) என தெரியவந்தது. இவா்களிடமிருந்து இருசக்கர வாகனம் மற்றும் இரண்டேகால் பவுன் ஆகியவற்றை கைப்பற்றினா். இந்த குற்றவழக்கில் சிறப்பாக பணியாற்றிய தனிப்படையினரை உயா் அதிகாரிகள் பாராட்டினா்.