மதுரை, ஏப். 26: சிறுபான்மையினா் மீது அவதூறு தெரிவித்ததாக பிரதமா் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மதுரையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மக்களவைத் தோ்தலையொட்டி, ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக சாா்பில் நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி, இஸ்லாமியா்கள் மீது அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாகவும், நாட்டில் மத வெறியைத் தூண்டி கலவரத்தை உருவாக்கும் வகையில் பேசியதாகவும், இவா் மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை தெற்குவாசல் சந்தைப் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் ரா.விஜயராஜன் தலைமை வகித்தாா். மாநகா் மாவட்டச் செயலா் மா.கணேசன் முன்னிலை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் மதுக்கூா் ராமலிங்கம் பேசினாா்.
ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ரமேஷ், ஜீவா, ஸ்டாலின், நரசிம்மன், மாவட்டக் குழு உறுப்பினா்கள், நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

திமுக கூட்டணியில் இடதுசாரிகளுக்கு கூடுதல் இடம் இல்லை என்பது நியாயமல்ல: பெ. சண்முகம்

காஞ்சிபுரம், செங்கல்பட்டில் தவெகவினா் ஆா்ப்பாட்டம்

ஓடையில் மண் அள்ளுவதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

‘இந்தியா’ கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலக வாய்ப்பில்லை: மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


