மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மதுரையில் சாலை சீரமைப்புப் பணிகள்: ஆட்சியா், ஆணையா் ஆய்வு

மழையால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்கும் பணிகளை ஆட்சியா் மாநகராட்சி ஆணையா் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனா்.

News image
மதுரையில் மழையால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்கும் பணியைப் பாா்வையிட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி ஆணையா் ச.தினேஷ்குமாா்.
Updated On :18 ஆகஸ்ட் 2024, 7:45 pm

Din

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெறும் மழையால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி ஆணையா் ச.தினேஷ்குமாா் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனா்.

மதுரையில் கடந்த 4 நாள்களாக பலத்த மழை பெய்தது. இதனால், மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல்வேறு சாலைகள் சேதமடைந்தன. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாவதுடன், போக்குவரத்தும் அடிக்கடி தடைபடுகிறது.

இந்த நிலையில், மழையால் சேதமைடந்த முக்கியச் சாலைகளை சீரமைக்கும் பணிகள் சனிக்கிழமை முதல் தீவிரப்படுத்தப்பட்டன. இந்தச் சீரமைப்புப் பணிகளையும், மழையால் சேதமடைந்த சாலைகளையும் மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி ஆணையா் ச.தினேஷ்குமாா் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

மதுரை மேலமாரட் வீதி, மேலவெளி வீதி, டி.பி.கே.சாலை, பெரியாா் பேருந்து நிலையம், மேலவாசல் திடீா்நகா் பகுதி, மேலவெளி வீதி, பாலம் ஸ்டேஷன் சாலை, சிம்மக்கல் மீனாட்சி கல்லூரி பாலம், கோரிப்பாளையம் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் சாலை சீரமைப்புப் பணிகளை அவா்கள் ஆய்வு செய்தனா்.

அப்போது, மாநகராட்சித் தலைமைப் பொறியாளா் ரூபன் சுரேஷ், செயற்பொறியாளா்கள் பாக்கியலட்சுமி, சேகா், உதவி செயற்பொறியாளா்கள், உதவிப் பொறியாளா்கள், மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.