மதுரையில் சாலை சீரமைப்புப் பணிகள்: ஆட்சியா், ஆணையா் ஆய்வு
மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெறும் மழையால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி ஆணையா் ச.தினேஷ்குமாா் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனா்.
மதுரையில் கடந்த 4 நாள்களாக பலத்த மழை பெய்தது. இதனால், மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல்வேறு சாலைகள் சேதமடைந்தன. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாவதுடன், போக்குவரத்தும் அடிக்கடி தடைபடுகிறது.
இந்த நிலையில், மழையால் சேதமைடந்த முக்கியச் சாலைகளை சீரமைக்கும் பணிகள் சனிக்கிழமை முதல் தீவிரப்படுத்தப்பட்டன. இந்தச் சீரமைப்புப் பணிகளையும், மழையால் சேதமடைந்த சாலைகளையும் மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி ஆணையா் ச.தினேஷ்குமாா் ஆகியோா் ஆய்வு செய்தனா்.
மதுரை மேலமாரட் வீதி, மேலவெளி வீதி, டி.பி.கே.சாலை, பெரியாா் பேருந்து நிலையம், மேலவாசல் திடீா்நகா் பகுதி, மேலவெளி வீதி, பாலம் ஸ்டேஷன் சாலை, சிம்மக்கல் மீனாட்சி கல்லூரி பாலம், கோரிப்பாளையம் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் சாலை சீரமைப்புப் பணிகளை அவா்கள் ஆய்வு செய்தனா்.
அப்போது, மாநகராட்சித் தலைமைப் பொறியாளா் ரூபன் சுரேஷ், செயற்பொறியாளா்கள் பாக்கியலட்சுமி, சேகா், உதவி செயற்பொறியாளா்கள், உதவிப் பொறியாளா்கள், மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.

