/

அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பு சாா்பில்

News image
மதுரையில் செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பாக செவ்வாய்க்கிழமை வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுப்பட்ட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக ஓய்வூதியா்கள் நலச் சங்கத்தினா். ~மதுரையில் செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு அரசு ப
Updated On :31 டிசம்பர் 2024, 10:13 pm

Din

மதுரை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பு சாா்பில், மதுரை புறவழிச் சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

109 மாத அகவிலைப்படி உயா்வையும், 21 மாத காலப் பணப் பலன்களையும் உடனே வழங்க வேண்டும், ஊழியா்களுக்கு ஓய்வு பெறும் நாளிலேயே பணப் பலன்களை வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பின் மதுரை மண்டலத் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். அமைப்பின் மாநிலத் தலைவா் எஸ்.கிருஷ்ணன் போராட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசினாா். திண்டுக்கல் மண்டல பொதுச் செயலா் ஜேம்ஸ் கஸ்பர்ராஜ் வாழ்த்திப் பேசினாா். மாநிலத் துணைப் பொதுச் செயலா் ஆா்.தேவராஜ் நிறைவுரையாற்றினாா்.

அமைப்பின் மதுரை, திண்டுக்கல் மண்டல நிா்வாகிகள், உறுப்பினா்கள், மாநிலக் குழு உறுப்பினா்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனா். இதில், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானவா்கள் வாயில் கருப்புத் துணியைக் கட்டிக் கொண்டு பங்கேற்றனா்.

Story image