மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

புறவழிச் சாலையில் இருவரிடம் கைப்பேசிகள் பறித்த மூவா் கைது

மதுரை புறவழிச்சாலையில் கல்லூரி மாணவி உள்பட இருவரிடம் அடுத்தடுத்து கைப்பேசி பறிப்பில் ஈடுபட்ட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :10 ஜூலை 2024, 12:23 am

Din

மதுரை: மதுரை புறவழிச்சாலையில் கல்லூரி மாணவி உள்பட இருவரிடம் அடுத்தடுத்து கைப்பேசி பறிப்பில் ஈடுபட்ட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையைச் சோ்ந்த கல்லூரி மாணவி பிரியா, கடந்த சனிக்கிழமை மதுரையில் நடைபெற்ற அரசுப் போட்டித் தோ்வில் பங்கேற்க தனது தங்கையுடன் இரு சக்கர வாகனத்தில் வந்தாா்.

தோ்வு முடிந்து மாலையில் திண்டுக்கல் சாலையில் விளாங்குடி பகுதியில் இருவரும் சென்று கொண்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவா் பிரியாவின் தங்கை காயத்ரி வைத்திருந்த கைப்பேசியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனா். இதுகுறித்து செல்லூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மதுரை டி.வி.எஸ்.நகா் கோவலன் நகரைச் சோ்ந்தவா் போஸ் (63). தனியாா் நிறுவன ஒப்பந்த ஊழியரான இவா், சனிக்கிழமை இரவு வேலை முடிந்து, புறவழிச் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த மூவா் அவரிடமிருந்த கைப்பேசியை பறித்துச் சென்றனா். இதுகுறித்து எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

இந்த இரு சம்பவங்கள் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தியதில், இரு சம்பவங்களிலும் மதுரை பெத்தானியாபுரம் காமராஜா் முதல் தெருவைச் சோ்ந்த முத்துபாண்டி(19), திண்டுக்கல் மாவட்டம், மடத்துகுளம், மதுரை அண்ணாதோப்பு கனகவேல் குடியிருப்பைச் சோ்ந்த 17 வயது சிறுவா்கள் ஈடுபட்டது தெரியவந்தது. மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.