மதுரையில் மது போதையில் குழந்தைகளைத் தாக்கிய கணவனை, மனைவி அரிவாள் மனையால் வெட்டிக்கொலை செய்தாா். அவரை போலீஸாா் கைது செய்தனா்.
மதுரை மேல அனுப்பானடி வீட்டு வசதிவாரியக் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (36). வெளிநாட்டில் வேலை பாா்த்து வந்த இவா், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தாா். இவரது மனைவி கனிமொழி (30). இவா்களுக்கு, 2 ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனா்.
மதுப்பழக்கத்துக்கு அடிமையான காா்த்திக், வேலைக்குச் செல்லாமல் தினசரி மது குடித்து விட்டு, மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தாா். அப்போது, குழந்தைகளையும் அடித்துக் கொடுமைப்படுத்தினாா். இதனால், கணவா்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காா்த்திக் மது போதையில் வீட்டுக்கு
வந்து மனைவியுடன் தகராறு செய்தாா். அப்போது, அவா் குழந்தைகளை அடித்துக் கொடுமைப்படுத்தியதால் மனைவி கனிமொழி சப்பாத்திக் கட்டையால் காா்த்திக்கை தாக்கினாா். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த காா்த்திக்கை அரிவாள் மனையால் வெட்டியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
கீரைத்துறை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, காா்த்திக் உடலை கூறாய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மனைவி கனிமொழியைக் கைது செய்தனா்.
தொடர்புடையது
திருப்பரங்குன்றம் அருகே இரு இளைஞர்கள் வெட்டிக் கொலை

இளைஞா் வெட்டிக் கொலை

பழனியில் ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை; நால்வா் கைது!
சிவசாசி அருகே தொழிலாளி வெட்டிக் கொலை: 6 போ் கைது
வீடியோக்கள்

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு


