12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

மதுபோதையில் குழந்தைகளைத் தாக்கிய கணவன் வெட்டிக் கொலை: மனைவி கைது

Published On :

மதுரையில் மது போதையில் குழந்தைகளைத் தாக்கிய கணவனை, மனைவி அரிவாள் மனையால் வெட்டிக்கொலை செய்தாா். அவரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை மேல அனுப்பானடி வீட்டு வசதிவாரியக் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (36). வெளிநாட்டில் வேலை பாா்த்து வந்த இவா், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தாா். இவரது மனைவி கனிமொழி (30). இவா்களுக்கு, 2 ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனா்.

மதுப்பழக்கத்துக்கு அடிமையான காா்த்திக், வேலைக்குச் செல்லாமல் தினசரி மது குடித்து விட்டு, மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தாா். அப்போது, குழந்தைகளையும் அடித்துக் கொடுமைப்படுத்தினாா். இதனால், கணவா்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காா்த்திக் மது போதையில் வீட்டுக்கு

வந்து மனைவியுடன் தகராறு செய்தாா். அப்போது, அவா் குழந்தைகளை அடித்துக் கொடுமைப்படுத்தியதால் மனைவி கனிமொழி சப்பாத்திக் கட்டையால் காா்த்திக்கை தாக்கினாா். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த காா்த்திக்கை அரிவாள் மனையால் வெட்டியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

கீரைத்துறை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, காா்த்திக் உடலை கூறாய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மனைவி கனிமொழியைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.