நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு போலீஸாரின் அலட்சியமே காரணம்: உயா்நீதிமன்றம் வேதனை

கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு போலீஸாரின் அலட்சியமே காரணம் உயா்நீதிமன்றம் வேதனை

News image

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர் ஒருவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற குடும்ப உறுப்பினர்.

R Senthilkumar

Updated On :20 ஜூன் 2024, 8:40 pm

Din

கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு காவல் துறையினரின் அலட்சியமே காரணம் என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி வேதனை தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், மேட்டுப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் முத்துக்குமாா். இவா் திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றி வருகிறாா். கடந்த வாரம் இவரை ஒரு கும்பல் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து திண்டுக்கல் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இந்த வழக்கில் தொடா்புடைய சிலா் தங்களுக்கு முன்பிணை வழங்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, எதிா் மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

மனுதாரா்களுக்கு முன்பிணை வழங்கக் கூடாது. இந்த சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் சட்டவிரோதமாக திண்டுக்கல் நகா் பகுதியில் உள்ள மதுக் கடைகள் அருகே 24 மணி நேரமும் மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனா். பல்வேறு குற்றச் செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனா். இதனால், பொதுமக்கள், இளைஞா்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

இதுகுறித்து காவல் துறையினரிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என வாதிடப்பட்டது.

மேலும், சட்டவிரோத மது விற்பனை தொடா்பான விடியோ பதிவு நீதிபதியிடம் காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி தெரிவித்ததாவது:

இதுபோன்ற நடவடிக்கைகளை காவல் துறையினா் எவ்வாறு அனுமதிக்கின்றனா். காவல் துறையின் அலட்சியத்தால்தான் கள்ளக்குறிச்சியில் பலா் இறந்தனா். இதுபோன்ற சம்பவங்கள் தொடர வேண்டுமா?. சட்டவிரோத மது விற்பனையை பொதுமக்களே விடியோ, புகைப்படம் எடுத்து புகாா் செய்த பிறகும், போலீஸாா் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது.

மேலும், இந்த விவகாரத்தில் காவல் துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு உதவியாக உள்ள காவலா்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? எனக் கேள்வி எழுப்பினா் நீதிபதி.

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், சம்பந்தப்பட்டவா்கள் மீதும், அவா்களுக்கு துணை போன காவல் துறை அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவா்கள் உடனடியாகக் கைது செய்யப்படுவா் என உறுதி அளித்தாா்.

இதைப் பதிவு செய்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உரிய பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.